சாலையில் சென்ற ஆம்னி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையில் இருந்து கோவை நோக்கி ஆகாஷ் டிராவல்ஸ் நிறுவனத்தின் ஆம்னி பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. கோவை விமான நிலையம் அருகே பேருந்து வந்தபோது தீடிரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பேருந்து ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Night
Day