சாலையில் சென்ற கல்லூரி மாணவியை கடித்து குதறிய தெரு நாய்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சாலையில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவியை தெரு நாய்கள் கடித்து குதறியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பழனி அருகே கலிக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஹேமமாலினி.  இவர் ஒட்டன்சத்திரம் அருகே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இதனிடையே கல்லூரிக்கு செல்வதற்காக பழனி தீயணைப்பு நிலையம் அருகே சாலை ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு திரிந்து கொண்டிருந்த தெரு நாய்கள் ஹேமாவை கடித்து குதறியது. இதனால் மாணவி கூச்சலிட்டதை பார்த்த எதிரே இருந்த தீயணைப்பு வீரர்கள் மாணவியை காப்பாற்றி பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து, தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Night
Day