சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு : தமிழக அரசு, சென்னை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சாலையோரங்களில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் 
தமிழக அரசு, சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்‍குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்கக் கோரி, சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் பேருந்து நிறுத்தங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான இடங்களில் பேருந்து நிறுத்தங்களில் மேற்கூரைகள் இல்லை எனவும் மனுதாரர் தெரிவித்து இருந்தார். இந்த வழக்‍கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு, சென்னை ஆட்சியர், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Night
Day