சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடியரசு துணைத்தலைவர் சுவாமி தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை புதுச்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் சென்றடைந்த ஜெகதீப் தன்கர், அங்கிருந்து கார் மூலம் நடராஜர் கோவிலுக்கு சென்றார். அப்போது சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் குடியரசு துணைத் தலைவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ஜெகதீப் தன்கர் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். குடியரசு துணைத் தலைவரின் வருகையையொட்டி, சிதம்பரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Night
Day