சின்னம்மாவிடம் தங்களது மனக்குமுறல்களை பகிர்ந்த மக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சென்று, மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்கு உணவு மற்றும் பல்வேறு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

சென்னை திரு.வி.க.நகர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் உள்ள சுந்தரராஜபுரம் குடியிருப்பு பகுதியில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உணவு மற்றும் பல்வேறு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

சென்னையில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பட்டாளம், சிவராவ் சாலை சந்திப்பில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த மக்களை, புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.

கனமழையினால் பாதிக்கப்பட்ட பட்டாளம் கே.எம்.கார்டன் குடியிருப்பு பகுதியில் அவதிப்படும் மக்களை புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

கே.எம். கார்டன் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் புரட்சித்தாய் சின்னம்மா நடந்தே சென்று, மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். கே.எம். கார்டனில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் சின்னம்மா நடந்தே சென்று பார்வையிட்டதோடு, அங்குள்ள மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டிற்குள் சென்று, அங்குள்ளவர்களிடம் சின்னம்மா, குறைகளைக் கேட்டறிந்தார்.

புரட்சித்தாய் சின்னம்மாவை கண்ட ஏழை, எளிய மக்கள் அன்போடு அவரிடம் ஓடி வந்து, மழை வெள்ள நிலைமை குறித்து எடுத்துக் கூறினார்கள்.

குடிசையில் வசித்து வந்த சின்னதுரை என்ற முதியவரை புரட்சித்தாய் சின்னம்மா சந்தித்து நிவாரண உதவிப் பொருட்களை வழங்கினார். நிதி உதவியும் வழங்கினார்.

சென்னையில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பட்டாளம் பகுதி முனுசாமி நாயுடு தெருவிலுள்ள குடியிருப்பு பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மா, பொதுமக்களை சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.


varient
Night
Day