சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - என்சிசி பயிற்சியாளர் உட்பட 8 பேர் கைது!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பள்ளி முதல்வர், தாளாளர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். பர்கூர் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை என்சிசி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் பள்ளி வளாகத்திலேயே தங்கி முகாமில் பங்கேற்ற நிலையில், என்சிசி பயிற்சியாளர் 8ம் வகுப்பு மாணவியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என பள்ளி முதல்வர் கூறிய நிலையில், மாணவிக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் சம்பவத்தை அறிந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், என்சிசி பயிற்சியாளர் சிவராமன், பள்ளி முதல்வர் சதீஷ்குமார் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். 

Night
Day