சிறுமி ரேகாவை தாக்‍கிய வழக்‍கில் ஜாமீன் கோரி எம்எல்ஏ மகன், மருமகள் மனு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகளால் தாக்கப்பட்டு துன்புறுத்தலுக்குள்ளான சிறுமி ரேகா நாளை காலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன் அளிக்‍கப்பட்டுள்ளது. பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி. இவரது மகன் ஆண்டோ மதிவாணன், மனைவி மெர்லின் ஆகியோர் தங்கள் வீட்டில் பணிபுரிந்த சிறுமி ரேகாவை தாக்‍கி துன்புறுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு தாக்‍கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாளை காலை வருகிறது. அப்போது பாதிக்கப்பட்ட சிறுமி நேரில் ஆஜராகி ஜாமீன் மனு மீது தனது தரப்பு கருத்தை தெரிவிக்குமாறு நீதிமன்றம் சம்மன் வழங்கி உள்ளது. அதனை சென்னை நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர் இன்பா, சிறுமி ரேகாவிடம் வழங்கினார்.

Night
Day