காரைக்குடி : சகோதரன் குடும்பத்தினரை வீட்டில் வைத்து பூட்டிய துணை ஆட்சியர்

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சகோதரன் குடும்பத்தை துணை ஆட்சியர் வீட்டில் வைத்து பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராக கண்மணி பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர் ராஜா என்பவர் காரைக்குடி சூடாமணிபுரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் நேற்றிரவு அவரது சகோதரிகள் இரண்டு பேர் சொத்து பிரச்சினை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் ராஜா புகார் செய்ததை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் நள்ளிரவில் வந்த துணை ஆட்சியர், அவரது வீட்டின் முன்பக்க கதவுகளை பூட்டி சகோதரரை வீட்டில் சிறை வைத்தனர். துணை ஆட்சியரே இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதை போலீசார் வேடிக்கை பார்ப்பதாக சகோதரர் குற்றம் சாட்டினார்.

Night
Day