சிவகங்கை: அரசு பேருந்தை வழிமறித்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தை வழிமறித்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலத்தில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தின் புதிய வழித்தடத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். இந்நிலையில் தனியார் பேருந்துகள் செல்லும் இவ்வழியில் அரசு பேருந்து இயக்குவதால் தனியார் பேருந்துக்கு இழப்பு ஏற்படுவதாக ஓட்டுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  இதனால் சிவகங்கை பேருந்து நிறுத்தத்தில் இருந்து கிளம்பிய அரசு பேருந்தை வழிமறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day