சிவகங்கை: வீட்டின் சுற்றுச் சுவர் மீது இடித்து நின்ற பேருந்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், நகர பேருந்து ஒன்று வீட்டின் சுற்றுச் சுவற்றில் மோதி விபத்தான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காரைக்குடியில் இருந்து சாத்தம்பத்தி கிராமத்திற்கு நகர பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது செஞ்சை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் காம்பவுன்ட் சுவர் மீது மோதியது. இதில் ஒட்டுநர் காயமடைந்த நிலையில் தகவலறிந்து வந்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day