சீர்காழி அருகே மீனவர்கள் கடலில் இறங்கி கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து மீனவர்கள் கறுப்புக் கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்குள்ள கீழ மூவர்க்கரை மீனவர் கிராமத்தை சேர்ந்த மக்கள், ரேஷன் கடை, சமுதாய கூடம், மீன் ஏல கூடம், மீன் வலை பின்னும் கூடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி போராடி வருகின்றனர். இந்த அடிப்படை வசதிகளை செய்து தரப்படாததை கண்டித்து, மீனவ கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கறுப்புக் கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Night
Day