சுந்தரபாண்டியபுரம் கழக நிர்வாகி வீட்டில் குறைகளை கேட்டறிந்தார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

சுந்தரபாண்டியபுரம் அம்பேத்கர் காலனி பகுதியில், கழக பெண் தொண்டர் ஜெயக்கொடி - சாக்‍ரடீஸ் தம்பதியினர் மற்றும் பெண் தொண்டர் மீனா வீட்டிற்கு புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சென்று சந்தித்தார். புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு, கழகத் தொண்டர் ஜெயக்‍கொடி பாசத்துடன் முத்தம் கொடுத்து வரவேற்றார். சின்னம்மா, வீட்டில் அமர்ந்து அனைவரிடமும் நலம் விசாரித்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் தானும் செயல்படப் போவதாக அவர்களிடம் சின்னம்மா தெரிவித்தார். 

புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து அவருடன் அன்போடு உரையாடிய பெண்கள், தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்றும், மகளிருக்‍கான ஆயிரம் ரூபாய் உதவித் தொகை நிறைய பெண்களுக்‍கு கிடைக்‍கவில்லை என்றும் படித்த நிலையிலும் வேலை வாய்ப்புகள் இல்லை என்றும் புகார் தெரிவித்தனர். 


Night
Day