சுரண்டையில் புரட்சித்தாய் சின்னம்மா உரை - "அம்மாவின் வழியில் மக்கள் பயணம்"

எழுத்தின் அளவு: அ+ அ-


தென்காசி மாவட்டத்தில், அம்மாவின் வழியில் மக்‍கள் பயணம் மேற்கொண்டுள்ள கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சுரண்டை பகுதிக்‍குச் சென்றபோது கழகத் தொண்டர்கள், மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 

திரளான பெண்கள், சாலையில் வரிசையாக நின்று மலர்கள் தூவி, சின்னம்மாவை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 

சுரண்டை சிவகாமி சுந்தரி வீரபாண்டிஸ்வரர் திருக்கோவிலில், புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

சுரண்டை பகுதியில் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு கழக நிர்வாகி செந்தூர்பாண்டியன் சார்பில் வரவேற்பு அளிக்‍கப்பட்டது. 

சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் புரட்சித்தாய் சின்னம்மாவை காண, பொதுமக்களும் கழகத் தொண்டர்களும் ஆர்வத்துடன் திரண்டிருந்தனர்.

அங்கு திரண்டிருந்த பொதுமக்‍களிடையே உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, திமுக ஆட்சியின் அவலங்களை புள்ளிவிவரங்களுடன் பட்டியலிட்டார். 



Night
Day