செங்கல்பட்டு: அரசு பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 10 பேர் காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அரசு பேருந்து மீது பாமகவினர் சென்ற வேன் மோதிய விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மதுராந்தகம் புறவழிச்சாலையில் பண்ருட்டியில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில் பயணிகள் ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல்லிருந்து சென்னையில் நடைபெறும் பாமக கூட்டத்திற்கு செல்வதற்காக வேனில் 20க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். அப்போது, நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்பக்கத்தில் வேன் வேகமாக மோதியது. இதில் வேனின் முன்பக்கம் சேதம் அடைந்து பத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வேனில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை பொதுமக்கள் மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.  

Night
Day