செங்கல்பட்டு: இறைச்சிக் கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சிக்குட்பட்ட மேலவலம் பேட்டை ஏரியில், இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இந்த ஏரியில் 5 கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் மேலவலம் பேட்டை பகுதி மக்கள் தங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில், இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால், ஏரி மாசடைந்து தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இறைச்சிக் கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day