செங்கல்பட்டு: துணி துவைக்க சென்ற தாயும் மகனும் கிணற்றுக்குள் மூழ்கி மாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே துணி துவைக்க சென்ற தாயும், மகனும் கிணற்றில் மூழ்கிய நிலையில், அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நெல்வாய் பாளையம் கிராமத்தை சேர்ந்த 35 வயதான விமல் ராணியும், அவரது 15 வயது மகன் பிரவீன் ஆகிய இருவரும், அங்குள்ள கிணற்றுக்கு துணி துவைக்க சென்றுள்ளனர். அப்போது சிறுவன் பிரவீன் எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் விழுந்ததால், அவரை காப்பாற்ற விமல் ராணியும் தண்ணீரில் குதித்துள்ளார். இதனைக் கண்ட விவசாய கூலி தொழிலாளர்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இருப்பினும், உள்ளூர் இளைஞர்கள் சிலர் கிணற்றில் குதித்து தாயையும், மகனையும் தேடி வருகின்றனர். 

varient
Night
Day