செங்கல்பட்டு: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் குடியிருப்புவாசிகள் வாக்குவாதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சாலை விரிவாக்க பணிக்காக அதிகாரிகள் குடியிருப்புகளை அகற்ற வந்ததால் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காலவாக்கம் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள குடியிருப்புகளை சாலை விரிவாக்க பணிக்காக அகற்ற திட்டமிட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், 3 மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு கொடுத்துள்ளனர். ஆனால் மாற்று இடம் ஏதும் வழங்கப்படாததால் மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறவில்லை. இதனிடையே அதிகாரிகள் இயந்திரங்களுடன் குடியிருப்புகளை அகற்ற சென்றதால், குடியிருப்பு வாசிகள் நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பணிகளை ஒத்திவைத்து புறப்பட்டு சென்றனர்.

Night
Day