செங்கல்பட்டு: பராமரிப்பு பணிகளால் மின்சார ரயில்கள் தாமதம் - பயணிகள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை ரயில் நிலையம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள், தினமும் காலதாமதமாக வருவதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். செங்கல்பட்டு முதல் கடற்கரை ரயில் நிலையம் வரை இயக்கப்படும் மின்சார ரயில், காலை 5:20 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்திற்கு 6.10 மணி முதல் 6.20-க்குள் வழக்கமாக வந்து சேரும். ஆனால், தண்டவாள பராமரிப்பு பணி காரணமலாக கடந்த சில நாட்களாகவே 6.30 மணியை கடந்து வருவதால் உரிய நேரத்தில் பணிக்கு செல்ல முடியாமல் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றர். இன்று வழக்கம் போல் மின்சார ரயில் தாமதமாக வந்ததால் ஆத்திரமடைந்த பயணிகள், ரயில்வே துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Night
Day