செங்கல்பட்டு: பிரியாணி கடையை மறைத்து பேனர் - தட்டிக்கேட்ட ஊழியர் மீது திமுகவினர் தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் அருகே கடையை மறைத்து பேனர் வைத்ததைத் தட்டிக்கேட்ட பிரியாணி கடை ஊழியரை திமுகவினர் தாக்கிய அராஜக காட்சிகள் வெளியாகி உள்ளன. நாகல்கேணி பகுதியில் அன்வர் பாஷா என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். அவரது கடையை மறைக்கும் வகையில் திமுக பிரமுகரான ஸ்ரீதர் என்பவர் பேனர் வைத்துள்ளார். இதனை கடை ஊழியர் தட்டிக்கேட்டதை அடுத்து ஸ்ரீதரும் அவருடன் வந்த திமுகவினரும் திடீரென ஊழியரை தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 

Night
Day