செங்கல்பட்டு: புதிய ஆட்சியர் அலுவலகத்தில் பழுதாகி நின்ற லிஃப்ட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தில் லிஃப்ட்டுக்குள் சிக்கிக் கொண்ட 2 கிராம நிர்வாக உதவியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய ஆட்சியர் அலுவலகம் கடந்த 26ம் தேதி முதல் செயல்பட தொடங்கியது. நேற்று கிராம நிர்வாக உதவியாளர்கள் அருள்ராஜ் மற்றும் அசிம் காந்த் இருசாமா ஆகியோர் கோப்புகளை எடுத்துக் கொண்டு லிஃப்டில் 2வது தளத்திற்கு சென்றுள்ளனர். அப்போது லிஃப்ட் பழுது காரணமாக பாதியிலேயே நின்றதால், இருவரும் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கூச்சலிட்டனர். இதையடுத்து 2வது தளத்தில் லிஃப்டின் மேற்கூரையை உடைத்து இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

Night
Day