செங்கல்பட்டு: மாமூல் பெற்றுக் கொண்டு மணல் கடத்தலுக்கு அனுமதி - காவல் உதவி ஆய்வாளர் மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே மணல் திருட்டில் ஈடுபடுபவர்களிடம் மாமூல் வாங்கிய உதவி ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. படாளம் பகுதியில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மாவட்ட எஸ்பி நடத்திய விசாரணையில், படாளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன், மாமூல் வாங்கிக் கொண்டு தொடர்ந்து மணல் கடத்தலை அனுமதித்து வந்ததாக தெரிந்தது. இதையடுத்து மோகனை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. 

Night
Day