செங்கல்பட்டு: 100 ஆண்டு பழமையான கோயிலை தனிநபர் இடிக்க முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே 100 ஆண்டு பழையான சங்கோதி அம்மன் கோயிலை இடிக்க தனிநபர் முயற்சிப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் கோயில் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கோயிலுக்கு பின்புறம் அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. இவருடைய நிலத்திற்கு செல்ல கோயில் இடைஞ்சலாக உள்ளதாகக்கூறி இடிக்க முயன்றுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோயில் முன்பு பொதுமக்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day