செங்குன்றம் - துணை மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் அருகே துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

செங்குன்றத்தில் வாணிய சத்திரம் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து அம்பத்தூர், மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் மழை பெய்து வந்த நிலையில், தற்போது மழை குறைந்து கடுமையான வெப்பநிலை வருகிறது. இந்நிலையில் திடீரென துணை மின் நிலையத்தின் ஒரு பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். 

Night
Day