செஞ்சியில் சினிமா பட பாணியில் 2 கார்கள் நேருக்குநேர் மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில்  சினிமா பட பாணியில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சென்னை மதுரவாயலைச் சேர்ந்த குமார் என்பவர் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம்  செஞ்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர் திசையில் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி நோக்கி சென்ற கார் மீது மோதியது. மேலும் அதே திசையில் பின்னால் வந்த இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியதில் அதில் வந்த வேல்முருகன், ஆனந்தராஜ் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.  இச்சம்பவம் தொடர்பாக செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வரும் நிலையில், 2 கார்கள் மோதிக் கொள்ளும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Night
Day