செட்டிகுளம் - புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு உற்சாக வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-


ராதாபுரம் சட்டமன்ற தொகுதி, செட்டிகுளம் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட செட்டிகுளம் பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்‍காக வருகை தந்த கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசுகள் வெடித்து, வாழ்த்து முழக்கங்களுடன் சின்னம்மாவுக்‍கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

செட்டிகுளத்தில் பொதுமக்‍கள் மற்றும் கழகத் தொண்டர்களிடையே எழுச்சியுரை ஆற்றிய கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவரும் வரை தான் ஓயப்போவதில்லை என்று சூளுரைத்தார்.

Night
Day