செந்தில் பாலாஜிக்கு வரும் மார்ச் 6 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 23வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் 3 ஆயிரம் பக்‍க குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்திருந்தனர். இதனிடையே, செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.  இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 6ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார். 

Night
Day