செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 4 வரை நீட்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 4 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 21 முறை நீட்டிக்கப்பட்ட அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் பொறுப்பு நீதிபதியான ஆனந்த் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.  இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 4 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 22 வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Night
Day