செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை ஒத்திவைக்ககோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை  தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பு வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

varient
Night
Day