சென்டர்மீடியனை தாண்டி சுழன்று நின்ற கார் - 11 வயது சிறுவன் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி அருகே சென்டர்மீடியனை தாண்டி கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரை சேர்ந்த முகமது பயாஸ் என்பவர், தனது குடும்பத்துடன் பெங்களூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அந்த கார் பர்கூர் அடுத்த அங்கிநாயனப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த அரசு பேருந்து முகமது பயாஸின் கார் மீது மோதியது. இதில், நிலைதடுமாறிய கார் அங்கிருந்த சென்டர்மீடியனில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த முகமது பயாஸின் 11 வயது மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது மனைவி சுமையாகானம், மகள் பாவிஷா ஆகிய மூவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day