சென்னையில் இடி, மின்னலுடன் விடிய விடிய கனமழை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் இரவில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்த நிலையில், காலையிலும் கனமழை தொடர்கிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்திற்கு அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் நேற்றிரவு சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. கோயம்பேடு, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அசோக்நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.

Night
Day