சென்னையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய விமானங்கள் முன்னறிவிப்பின்றி 2வது நாளாக ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.  துபாய், சார்ஜா, குவைத் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மோசமான வானிலை நிலவி வருகிறது. இதனால், சென்னை விமானநிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்ல வேண்டிய விமானங்கள் 2வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானங்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

Night
Day