சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கொளத்தூரில் உள்ள குறும்பட இயக்குநர் முகில் சந்திரா வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தேசிய புலனாய்வு முகமை, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளின் விசாரணை மற்றும் சோதனை திவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், சென்னை கொளத்தூரில் உள்ள ஆந்திராவை சேர்ந்த குறும்பட இயக்குனர் முகில் சந்திரா என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மாவோயிஸ்டுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day