சென்னையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையின் 4 மண்டலங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நாளை மறுநாள் முதல் பத்து நாட்களுக்கு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே குடிநீர் வழங்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.  தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்னதாக நெம்மேலியில் அமைந்துள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் கடல்சார் பணிகள் மற்றும் நிலைய பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், நாளை மறுநாள் முதல் ஜூன் 2ம் தேதி வரை, 2 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை தேனாம்பேட்டை, அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களை சேர்ந்த பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

varient
Night
Day