சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர் - ஆசிரியர்களுக்‍கு நோட்டீஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் தேர்தல் பணிக்கு வராத ஆயிரத்து 500 அரசு  ஊழியர்- ஆசிரியர்களுக்கு  விளக்கம்  கேட்டு  நோட்டீஸ் அனுப்பி வைக்‍கப்பட்டுள்ளது. சென்னையில்  உள்ள  வட சென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை ஆகிய 3 நாடாளு மன்ற  தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட மொத்தம் 19 ஆயிரத்து 400 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  தேர்ந்தெடுக்கபட்டு தேர்தல் பணிக்‍கான பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தேர்தல் பணிக்கு வராத ஆயிரத்து 500 அரசு  ஊழியர்- ஆசிரியர்களுக்கு  விளக்கம்  கேட்டு  நோட்டீஸ் அனுப்பி வைக்‍கப்பட்டுள்ளதுடன், பயிற்சிக்‍கு வராதவர்களுக்‍கு நாளை 30 ஆம் தேதி மீண்டும் பயிற்சி அளிக்கப்படுவதாக மாவட்ட  தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையாளருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Night
Day