சென்னையில் மழை : 2-வது நாளாக விமான சேவைகள் பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் சூறைக்காற்று இடி மின்னலுடன் பெய்த பலத்த மழை காரணமாக, மீனம்பாக்கம் விமான நிலையத்தில், இரண்டாவது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. 

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு  இடி மின்னலுடன் கூடிய கனமழைபெய்தது. இதனால் கோழிக்கோடு, டெல்லியில் இருந்து வந்த விமானங்கள் தரையிரங்க முடியாமல் திருச்சிக்கும், பெங்களூருவிற்கும் திருப்பி அனுப்பப்பட்டன.  அதைப்போல் மதுரை, மும்பை, கோவை, டெல்லி, ஹைதராபாத், கோவா, வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் இருந்து வந்த 10 விமானங்கள் நீண்ட நேரம் தரையிறங்க முடியாமல் தவித்தன. துபாய், குவைத், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய 14 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Night
Day