சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

சென்னையில் அண்ணாநகர், வில்லிவாக்கம், கொளத்தூர், பாடி, கொரட்டூர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. மேலும் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதையில் 2 அடிக்கு மேல் மழைநீர் தேங்கியிருந்ததால் பலரது இருசக்கர வாகனம் பழுதானது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை தள்ளி கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. 

Night
Day