சென்னையில் 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கடற்கரை, தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த 55 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இன்றும், நாளையும் 55 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்களின் வசதிக்காக கடற்கரை - பல்லாவரம் வரை 20 நிமிட இடைவெளியில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல, செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையேயும்  சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ரயில்கள் ரத்தால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.   

Night
Day