சென்னையை குளிர்வித்த கோடை மழை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கோடை வெயில் கொளுத்தி வந்தது. மாநிலத்தில் பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது. சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, பட்டினப்பாக்கம், உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிரச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Night
Day