சென்னை அண்ணாநகர் ரவுண்டானா அருகே தி.மு.க. எம்.எல்.ஏ. மோகனை கண்டித்து மக்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்காக அண்ணா நகர் வளைவில் இருந்து சாந்தி காலனி வரை குடிசை பகுதிகளை அகற்றுவதை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரவாயல் பகுதியில் இருந்து என்.எஸ்.கே நகர் வழியாக அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக சர்வீஸ் சாலை அமைப்பதற்காக அண்ணா நகர் வளைவிலிருந்து சாந்தி காலனி வரை கூவம் ஆற்று கால்வாய் ஓரம் குடிசைகளை முன்னறிவிப்பின்றி அகற்ற முயற்சிப்பதாக கூறி அப்பகுதி மக்கள் அமைந்தகரை காவல் நிலையம் எதிரே சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day