சென்னை அருகே சாலையில் சென்ற கண்டெய்னர் லாரி ஓட்டுநருக்‍கு வலிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தாம்பரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநருக்‍கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் அடுத்தடுத்து 10 வாகனங்களில் மோதி நின்றதில் 4 பேர் காயமடைந்தனர். தாம்பரம் தர்காஸ் சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் ஓட்டுநர் சசிக்‍குமாருக்‍கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ​தீயணைப்பு பயிற்சி வாகனம் உட்பட அடுத்தடுத்து 10 வாகனங்கள் மீது மோதியது. இதனால்  தீயணைப்பு பயிற்சி வாகனத்தில் பயிற்சி மேற்கொண்ட தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட 4 பேருக்‍கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பொத்தேரியில் உள்ள தாம்பரம் போக்‍குவரத்து போலீசார் வழக்‍குப் பதிந்து விசாரண மேற்கொண்டனர். 

Night
Day