சென்னை ஐஐடிக்கு ரூ.110 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ஐஐடி வளாகத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலுக்கான நிறுவனத்தை அமைக்க முன்னாள் மாணவர் ஒருவர் 110 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். இந்தியாவை சேர்ந்தவரும் 1975 ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் பயின்று தற்போது அமெரிக்காவில் தொழிலதிபராக உள்ள சுனில் வதவானி  என்பவர் இந்த நன்கொடையை வழங்கியுள்ளார். ஐஐடி இயக்குனர் காமகோடியிடம் 110 கோடி ரூபாய் வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய சுனில் வதவானி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு தொழில்களில் மிக வேகமாக பயன்படுத்த தொடங்கி இருப்பதன் காரணமாகவும், வேகமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்வதன் காரணமாகவும் சென்னை ஐஐடிக்கு 110 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியதாக தெரிவித்தார்.

Night
Day