சென்னை கமிஷனர் அருண் மீது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மெரினா வான் சாகச நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசல் மற்றும் வெயிலால் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் சரவணன் கருப்பசாமி என்ற வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். அதில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்காமல் காவல் ஆணையர் அருண் கடமை தவறிவிட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் போது மக்களுக்கு, அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். 

varient
Night
Day