சென்னை காசிமேட்டில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை காசிமேட்டில், மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலின்போது, சென்னை காசிமேட்டில் முழுவதும் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு தமிழக அரசு ஏழரை லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தது. இந்நிலையில் கலைவாணர் அரங்கத்தில் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால். இந்த நிகழ்ச்சிக்‍கு பாதிக்‍கப்பட்ட மீனவர்களை அழைக்‍காமல், முன்னறிவிப்பு ஏதுமின்றி மீன்வளத்துறை அதிகாரிகள் நிகழ்ச்சியை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாதிக்‍கப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள், காசிமேடு மீன்பிடிதுறைமுக காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day