சென்னை கோரமண்டல் உர தொழிற்சாலையை, மூடக்கோரி போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை எண்ணூரில் கோரமண்டல் உர தொழிற்சாலையை நிரந்திரமாக மூடக்கோரி 81வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எண்ணூரில் அமைந்துள்ள கோரமண்டல் என்ற தனியார் உர தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழாய் உடைந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த தொழிற்சாலையை மாசுக்கட்டுப்பாடு வாரியம் தற்காலிகமாக மூட உத்தரவிட்டது. ஆனால், உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி, பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 81வது நாளாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாமலும், வியாபாரிகள் கடைகளை அடைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

Night
Day