சென்னை சவுகார்பேட்டையில் மின்சாதன பெட்டியில் திடீர் தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை சவுகார்பேட்டையில் மின்சாதன பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சவுகார்பேட்டை மீட்டு தெரு பஜார் வீதியானது, நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய பரபரப்பான இடமாக உள்ளது. இந்த இடத்தில் சாலையோரம் உள்ள மின்சாதன பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரமாக கொளுந்து விட்டு எரிந்த தீயானது அருகில் இருந்த விளம்பர பதாகைகளிலும் பற்றியதால் வேகமாக தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த சாலையை கடந்து செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் 

Night
Day