சென்னை சூளை : குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் - மக்கள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை சூளை அருகேயுள்ள தட்டாங்குளம் பகுதியில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. 100க்கும் மேற்பட்ட வீடுகளில் சூழ்ந்துள்ள மழைநீரால், அத்தியாவசிய பொருட்களுக்கு கூட வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் வீடுகளுக்குள் சூழ்ந்த மழைநீரால், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி வாசிகள் குமுறுகின்றனர். இதுவரை அதிகாரிகள் ஒருவர் கூட தங்களின் நிலை குறித்து அறிந்துகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக மனக்குமுறலை வெளிப்படுத்துகின்றனர். 

சென்னை சூளை பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் ஏராளமான மின்சாதன பொருட்கள் சேதமடைந்துள்ளது. மழை நின்ற பிறகும் பல வீடுகளில் தண்ணீர் வடியாததால், மாற்று துணிக்கூட இன்றி அவதியுற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் என எதுவும் கிடைக்காமல் கடந்த இரண்டு நாட்களாக அவதியுற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


Night
Day