சென்னை போன்ற பகுதிகளில் ஆணவக் கொலை நடப்பது அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குக்கிராமங்களில் நடைபெற்று வந்த ஆணவக் கொலை தற்போது சென்னை போன்ற நகரங்களில் நடப்பது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். தென் மாவட்டங்களில் தொடர்கின்ற ஜாதிய படுகொலைகளை தடுக்க அரசு மற்றும் காவல்துறை தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

Night
Day