சென்னை மதுரவாயலில் கார் உபகரணங்கள் கடையில் பயங்கர தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மதுரவாயலில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தால், அடுத்தடுத்து 4 கடைகளில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

மேட்டுக்குப்பம் பிரதான சாலையில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் மின்கசிவு காரணமாக பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அதிகம் இருந்ததால் தீ மளமளவென அருகில் இருந்த கார் உபகரணங்கள் பொருத்தும் கடை உள்ளிட்ட 4 கடைகளுக்கும் பரவியது. கொளுந்துவிட்டு எரிந்த தீயால் அப்பகுதி முழுவதும் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழந்து காட்சியளித்தது. இதனையடுத்து 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

varient
Night
Day