சென்னை மாநகராட்சி, எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் திட்ட அனுமதிஇன்றி கட்டுமான பணிகள் மேற்கொண்ட எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும் 25 லட்ச ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதித்ததன் மூலம் கடமை தவறிய அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த அபராத தொகையை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Night
Day