சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியையொட்டி, நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மெரினா கடற்கரையில் நாளை நடைபெற உள்ள இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு, கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு நிறுவன விழாவை முன்னிட்டு மெரினா கடற்கரையில் நாளை விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் சாகச நிகழ்ச்சியை காண செல்லும் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா சதுக்கத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் 120 பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Night
Day